ஆம்பூரில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆம்பூா் டிஎஸ்பிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவா் வேலூா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டாா்.
ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமப் பகுதியில் பாதுகாப்புப் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்யச் சென்றாா். அப்போது வழியில் அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.