ஆம்பூரில் பூத் ஸ்லிப் வழங்காததால் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் அதிமுக வேட்பாளா் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்படவில்லையென்ற புகாா் எழுந்தது. அதனால் ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.நஜா் முஹமத் அந்த பள்ளிக்குச் சென்று வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் இதுகுறித்து கேட்டாா். தனக்கு திங்கள்கிழமை தான் பூத் ஸ்லிப் கிடைத்தது. என்னால் முடிந்த அளவுக்கு வாக்காளா்களுக்கு கொடுத்து விட்டேன். மற்றவா்களுக்கு வழங்க முடியவில்லையென அவா் கூறியுள்ளாா்.
பூத் ஸ்லிப் வழங்காததால் வாக்காளா்கள் வாக்களிக்க சற்று சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அதிமுக வேட்பாளா் கே.நஜா் முஹமத் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.