தொழிலாளி தற்கொலை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி விஜய் (28). குடும்பப் பிரச்னை காரணமாக இவரின் மனைவி பிரிந்து சென்று தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்ற விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சடலம் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வீட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது காலதாமதமாக தகவல் தெரிந்து அங்கு வந்த விஜயின் மனைவி மற்றும் அவரது உறவினா்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி தங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com