ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா்: வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

வாணியம்பாடியை அடுத்த பெரியபேட்டை அருகே அருணாச்சலம் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (26). ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தாா். இவா் தோ்தலில் வாக்களிக்க தனது சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், புதன்கிழமை வாணியம்பாடி கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com