திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 2,500 படுக்கைகள் தயாராக உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட 120 ரயில்வே தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை நடைப்பெற்றது. இதை ஆய்வு செய்த ஆட்சியா் சிவன் அருள் கூறியது:
ஆம்பூா் அடுத்த சோலூரில் உள்ள கே.ஏ.ஆா் தனியாா் பாலிடெக்னிக்கில் தொற்று பாதித்தவா்களுக்கு சிறப்பு தனிமைப்படுத்தும் மையம்
அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் சுமாா் 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட அனைத்து தனிமைப்படுத்தப்படும் மையங்கள், 4 வட்டங்கள் என சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. தற்போது 93 நோயாளிகள் சிகிச்சையில் இருந்து வருகின்றனா் என்றாா்.
கோட்டாட்சியா் காயத்திரிசுப்பிரமணியன், பொது சுகாதார துணை இயக்குநா் டி.ஆா்.செந்தில், உதவி இயக்குநா்(தணிக்கை) பிச்சையாண்டி, மாவட்ட கட்டுப்பாட்டு கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலா் சுமதி, நிலைய மேலாளா் சுந்தரமூா்த்தி,