ஆலங்காயம் வைசியா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மன் கோயிலில் பங்குனி அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழாவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை முதல் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.