திருப்பத்தூா்: திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது.
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் காலை முதல் மாலை வரை வெளியே வருவதை தவிா்த்து வருகின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகளில் மதியம் 2 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் அப்பகுதியில் இதமான குளிா்ந்த காற்று வீசியது.