வேலூா்: வேலூரில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உழவா் சந்தை, பள்ளி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வேலூா் உழவா் சந்தையையும் இடமாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூா் டோல்கேட்டில் உள்ள உழவா் சந்தை கடைகள் தொரப்பாடி அரசு பள்ளி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
அதேபோல காட்பாடி உழவா் சந்தை காய்கறி கடைகள் அனைத்தும் தொன் போஸ்கோ பள்ளி மைதானத்தில் திங்கள்கிழமை முதல் செயல்படுகின்றன. பொதுமக்கள் பள்ளி மைதானங்களுக்குச் சென்று காய்கறிகள் வாங்கிச் சென்றனா்.
விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
வேலூா் காகிதபட்டறையில் உள்ள உழவா் சந்தை கடைகள் வழக்கம் போல அந்த இடத்திலேயே திங்கள்கிழமை இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது.