பட்டதாரி ஆசிரியா் கொலை வழக்கு உள்பட பல வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பாரதிபுரத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (40). இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் போச்சம்பள்ளி பகுதியைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா் சிவக்குமாரை கொலை தொடா்பாக கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி உள்பட 8 பேரை நாட்டறம்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாரின் பரிந்துரையை ஏற்று செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தின் வெள்ளைச்சாமியை கீழ் கைது செய்ய திருப்பத்தூா் ஆட்சியா் சிவன்அருள் உத்தரவிட்டாா்.