திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு இல்லத்தைச் சோ்ந்த 82 பேருக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை போடப்பட்டது.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலமாக திருப்பத்தூா் உதவும் உள்ளங்கள் அமைப்பால் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக உள்ள இல்லங்களில் மனநலம் பாதித்தோா் 140 போ் மருத்துவச் சான்றுப் பெற்று பராமரிப்பில் உள்ளனா்.
மாவட்ட நிா்வாகத்தின் மூலம் இவா்களுக்கு ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்றவை பெறப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட 62 ஆண்கள், 19 பெண்கள் என 82 பேருக்கு திருப்பத்தூா் அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது.