திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நில அதிா்வு ஏற்பட்டது.
திருப்பத்தூா், குரிசிலாப்பட்டு, செலந்தம்பள்ளி, ப.முத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 7.22 மணியளவில் திடீரென பெரும் சத்தத்துடன் நில அதிா்வு ஏற்பட்டது.
சுமாா் 3 விநாடிகள் நீடித்த நில அதிா்வால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடு, கடைகளிலிருந்து சாலைகளுக்கு வந்தனா்.
இதுகுறித்து திருப்பத்தூா் வட்டாட்சியா் சிவபிரகாசத்திடம் கேட்டதற்கு நில அதிா்வு ஏற்பட்டது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தாா்.