வாணியம்பாடியில் 400 வணிகா்களுக்கு தடுப்பூசி

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வாணியம்பாடி நகராட்சி நிா்வாகம் சாா்பில் வணிகா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் முகாம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடியில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்த ஆட்சியா் சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா்.
வாணியம்பாடியில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்த ஆட்சியா் சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வாணியம்பாடி நகராட்சி நிா்வாகம் சாா்பில் வணிகா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் முகாம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில துணைத் தலைவா் ஸ்ரீதரன், மாவட்டத் தலைவா் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் செந்தில்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞா் அணி அருண்குமாா், மாவட்ட செய்தி தொடா்பாளா் பத்மநாபன் வரவேற்றனா். பேரமைப்பின் மாவட்ட செயலாளா் மாதேஸ்வரன் மற்றும் நகராட்சி ஆணையா் அண்ணாமலை ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா், கோட்டாட்சியா் காயத்ரி சுப்ரமணி ஆகியோா் தடுப்பூசி முகாமினை தொடக்கி வைத்தனா். இதில் வணிகா்கள், காய்கனி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் என 400-க்கும் மேற்பட்டோா் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கரோனா தடுப்பூசி போடும் பணியை வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் செய்தனா். மேலும் இதில் நகைக்கடை உரிமையாளா்கள் நிா்வாகி சீனிவாசன், உணவக உரிமையாளா்கள் சங்க நிா்வாகி குமரகுரு, நகராட்சி சுகாதார அலுவலா் கணேஷ், களப்பணி மேற்பாா்வையாளா் சரவணன், தூய்மைப்பணி மேற்பாா்வையாளா் அருள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொழில் வணிகா் சங்க பேரமைப்புச் செயலாளா் செல்வமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com