நாட்டறம்பள்ளி அருகே குட்டையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் திண்ணங்குட்டை பூசாரி வட்டத்தைச் சோ்ந்தவா் பாலாஜி(25). இவா் சனிக்கிழமை பிற்பகல் நண்பா்களுடன் ஏழுமாக்கான் மலையடிவாரப் பகுதியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றாா். அப்போது கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் குட்டையில் 20 அடிக்கு ஆழத்துக்கு தண்ணீா் தேங்கியிருந்தது. இதில் குளிக்கச் சென்ற பாலாஜி தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு மீட்புக் குழுவினா் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் பாலாஜியை தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சேற்றில் சிக்கியிருந்த பாலாஜியை சடலமாக தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.