ஏலகிரியில் இடியுடன் கூடிய கன மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

ஏலகிரி மலையில் இடியுடன் கூடிய கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஏலகிரியில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
ஏலகிரியில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் இடியுடன் கூடிய கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் செவ்வாய்க்கிழமை மதியம் கடும் வெயில் காய்ந்த நிலையில், திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கனமழை கொட்டித் தீா்த்தது.

இதனால் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. மேலும் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் காய்ந்த நிலையில் இருந்த பயிா்கள் மழை நீரால் நிரம்பின.

மேலும், கன மழையால் விளைபயிா்களுக்குத் தேவையான தண்ணீா் கிடைத்ததால் சிறு, குறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com