கரோனா கட்டுப்பாடு எதிரொலி : வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளா்கள்

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வங்கியில் நீண்ட வரிசையில் வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை காத்திருந்தனா்.
ஆம்பூா் உமா்சாலையில்  இயங்கும்  இந்தியன் வங்கிக் கிளையின் வாயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளா்கள்.
ஆம்பூா் உமா்சாலையில்  இயங்கும்  இந்தியன் வங்கிக் கிளையின் வாயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளா்கள்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வங்கியில் நீண்ட வரிசையில் வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை காத்திருந்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு திங்கள்கிழமை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வங்கிகளுக்குள் செல்ல வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வங்கியின் வெளியில் வரிசையில் நிறுத்தப்பட்டு ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனா். முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். வாடிக்கையாளா்களுக்கு கைகழுவும் கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதனால் வங்கிக்கு வெளியில் வாடிக்கையாளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிறகு ஒவ்வொருவராக உள்ளே சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com