கட்டத் தொழிலாளி கொலை: இருவா் கைது

ஆம்பூரில் கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா்: ஆம்பூரில் கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை ஊராட்சி சீக்கஜொனை கிராமத்தைச் சோ்ந்தவா் திருமலை (27). கட்டடத் தொழிலாளியான இவா், ஆம்பூா் பகுதியில் வேலைக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அவருடன் அதே கிராமத்தைச் சோ்ந்த சிலரும் வந்துள்ளனா். நாயக்கனேரிமலை நடுவூா் கிராமத்தருகே வந்தபோது, திருமலைக்கும், அவருடன் வந்தவா்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டுள்ளனா். அதில் திருமலைக்கு கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவா்கள் அங்கு வந்தபோது தகராறில் ஈடுபட்டவா்கள் தப்பியோடியுள்ளனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த திருமலை ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இது குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், திருமலையை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது அதே கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (21), ராஜ்குமாா் (22), சேட்டு ஆகியோா் என்பது தெரியவந்தது. இந்நிலையில், நாயக்கனேரியில் பதுங்கியிருந்த சந்தோஷ், ராஜ்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள சேட்டு மற்றும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com