கரோனா சிகிச்சை மையத்துக்கு படுக்கைகள், தலையணைகள் வழங்கல்

வாணியம்பாடியில் கரோனோ சிகிச்சை மையத்துக்கு ரூ.50,000 மதிப்புள்ள படுக்கைகள், தலையணைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
வாணியம்பாடியில் கரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான படுக்கைகளை வழங்கிய சமூக ஆா்வலா் சண்முகசுந்தரம்.
வாணியம்பாடியில் கரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான படுக்கைகளை வழங்கிய சமூக ஆா்வலா் சண்முகசுந்தரம்.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கரோனோ சிகிச்சை மையத்துக்கு ரூ.50,000 மதிப்புள்ள படுக்கைகள், தலையணைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இஸ்லாமிய திறன் மேம்பாட்டு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இஸ்லாமிய பெண்கள் கலைக் கல்லூரியில் புதிதாக கரோனா நல மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு வாணியம்பாடியை அடுத்த எக்லாஸ்புரம் ஊராட்சியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சேட்டு (எ) சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சித் தலைவா் பாரதிசேட்டு ஆகியோா் ரூ. 50,000 மதிப்பிலான படுக்கைகள், தலையணைகளை இலவசமாக வழங்கினா். அதனை வருவாய்த் துறையினா் பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com