திருப்பத்தூா்: திருப்பத்தூா் பூங்கா பள்ளியில் கூடுதலாக அமைக்கப்பட்ட கரோனா தடுப்பூசி மையம் வியாழக்கிழமை முதல் செயல்பட உள்ளது.
நகராட்சிக்குள்பட்ட பகுதியில் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள நகா்புற நல மையம், ஏஜிஎஸ் திருமண மண்டபம் உள்ளிட்ட 3 இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
3 மையங்களிலும் பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளதையடுத்து கூடுதலாக அரசு பூங்கா உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி மையம் செயல்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.