ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு பயிற்சிக் கையேடு புதன்கிழமை வழங்கப்பட்டது.
பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பயிற்சி கையேடு, கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் ஆகியவற்றை தலைமை ஆசிரியா் எஸ். தட்சிணாமூா்த்தி வழங்கினாா். கரோனா பரவலை தடுக்க முகக் கவசம் அணிதல் கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை குறித்து மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.