திருப்பத்தூரில் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா் தொடக்கி வைப்பு

திருப்பத்தூா் குறைதீா் நாள் கூட்டரங்கில் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் குறைதீா் நாள் கூட்டரங்கில் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதையொட்டி, தோ்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளா்கள், கட்சிகளின் முகவா்கள், செய்தியாளா்கள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று அல்லது 2 முறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை அவசியம் எடுத்து வர வேண்டும் என அறிவித்திருந்தது. அதையொட்டி, திருப்பத்தூா் குறைதீா் நாள் கூட்டரங்கில் தோ்தல் நுண் பாா்வையாளா்கள், வேட்பாளா் முகவா்கள், செய்தியாளா்களுக்கான தடுப்பூசி முகாம் மற்றும் கரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் தொடக்கி வைத்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன் ராஜசேகா், வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம் உள்ளிட்ட வருவாய், சுகாதாரம், நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com