வாணியம்பாடி தொகுதி வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

வாணியம்பாடி தொகுதி வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.

வாணியம்பாடி: வாணியம்பாடி தொகுதி வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.

தமிழகத்தில் வரும் மே 2-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையடுத்து, வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) சான்றிதழ் பெற்றால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்ல வேண்டும் என தமிழகத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, வியாழக்கிழமை காலை வாணியம்பாடி தாலுகா அலுவலகம் அருகே வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ஜி.செந்தில்குமாா், திமுக கூட்டணி ஐயூஎம்எல் கட்சி வேட்பாளா் முகமதுநயீம் மற்றும் பிற கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள், பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோருக்கு வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com