திருப்பத்தூா் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவைப் பணி திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இது தொடா்பாக திருப்பத்தூா் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் எம்.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா பரவல் தடுப்பையொட்டி, தபால் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி முதல் ஆதாா் சேவைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் ஆதாா் சேவைப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.