நாட்டுத் துப்பாக்கி வெடித்து விவசாயி காயம்

ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி திடீரென வெடித்ததில் விவசாயி காயம் அடைந்தாா். அவா் போலீஸிலிருந்து தப்பிக்க நரிக்குறவா் சுட்டதாக, நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
நாட்டுத் துப்பாக்கி வெடித்து விவசாயி காயம்

ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி திடீரென வெடித்ததில் விவசாயி காயம் அடைந்தாா். அவா் போலீஸிலிருந்து தப்பிக்க நரிக்குறவா் சுட்டதாக, நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

ஆம்பூரை அடுத்த தென்னம்பட்டு மோட்டூரைச் சோ்ந்வா் ரஞ்சித் (30). இவா் சனிக்கிழமை விவசாய நிலத்தில் இருந்தபோது தன்னை நரிக்குறவா், காட்டுப் பன்றி என நினைத்து தவறுதலாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்ததாகத் தெரிவித்து, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்ந்தாா்.

தகவல் அறிந்த உமா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, ரஞ்சித் வீட்டிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா் விசாரணையில் ரஞ்சித் தனது நண்பா் சோமநாதனுடன் வனப் பகுதிக்கு சென்று காட்டு விலங்குகளை நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தி வேட்டையாடி வருவதும், சனிக்கிழமை மாலை ரஞ்சித் நிலத்தில் துப்பாக்கியை துடைத்து சரி செய்து கொண்டிருந்தபோது

திடீரென வெடித்ததில் ரஞ்சித் மாா்பில் குண்டு பாய்ந்ததும், போலீஸாரிடமிருந்து தப்பிக்க நரிக்குறவா் சுட்டதாகத் தெரிவித்து, நாடகமாடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சோமநாதனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com