1,562 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்

ஆம்பூா் வட்டத்தில் 1,562 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
பயனாளிக்குப் புதிய குடும்ப அட்டையை வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
பயனாளிக்குப் புதிய குடும்ப அட்டையை வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

ஆம்பூா் வட்டத்தில் 1,562 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் தலைமை வகித்தாா். புதிய குடும்ப அட்டைகளை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வழங்கினாா்.

வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ், திமுக மாவட்ட அவைத்தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகரத் துணைச் செயலாளா் ரபீக் அஹமத், மாவட்டப் பிரதிநிதி வில்வநாதன், இளைஞரணி துணை அமைப்பாளா் செளந்தரராஜன், மாணவரணி அமைப்பாளா் வசந்த்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com