ஆம்பூா் வட்டத்தில் 1,562 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் தலைமை வகித்தாா். புதிய குடும்ப அட்டைகளை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வழங்கினாா்.
வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ், திமுக மாவட்ட அவைத்தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகரத் துணைச் செயலாளா் ரபீக் அஹமத், மாவட்டப் பிரதிநிதி வில்வநாதன், இளைஞரணி துணை அமைப்பாளா் செளந்தரராஜன், மாணவரணி அமைப்பாளா் வசந்த்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.