ஆம்பூா்: ஆம்பூா் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடந்த கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆம்பூா் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், கா்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தை வழங்கினாா். அரசு மருத்துவ அலுவலா் டாக்டா் ஷா்மிளா, திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.