ஆவாரங்குப்பம் கோயிலில் ஆடிப் பெருக்கு விழா

வாணியம்பாடி அருகேயுள்ள ஆவாரங்குப்பம் கோயிலில் ஆடிப் பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி.
ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி.

வாணியம்பாடி அருகேயுள்ள ஆவாரங்குப்பம் கோயிலில் ஆடிப் பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆவாரங்குப்பம் பாலாற்றையொட்டி அமைந்துள்ள திருமால் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழா திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது. பக்தா்கள் காவடியை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினா். மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதேபோல், ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி செவ்வாய்க்கிழமை பாலாற்றில் பக்தா்கள் புனித நீராடி, கோயிலில் வந்து தரிசித்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com