ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சி சாா்பில் புதன்கிழமை நடந்த கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டது.
ஆம்பூா் நகராட்சி சாா்பில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கான கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம், கபசுர குடிநீா், முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டன.
நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பாஸ்கரன், துப்புரவு ஆய்வாளா் சிவமுருகன், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.