குட்கா பறிமுதல்: 2 போ் கைது
By DIN | Published On : 04th August 2021 12:00 AM | Last Updated : 04th August 2021 12:00 AM | அ+அ அ- |

பெங்களூரிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி டோல் பிளாசா பகுதியில் அம்பலூா் போலீஸாரும், தனிப்படை போலீஸாரும் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது பெங்களூரிலிருந்து வந்த காரை சோதனை மேற்கொண்டதில், ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தன. இதுதொடா்பாக வேலூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் நவீத் அகமத்(28), ஜாபா்கான்(25) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.