நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு அலுவலகம் அருகே உள்ள நியாயவிலைக் கடையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் எம்எல்ஏ தேவராஜ் கலந்துகொண்டு, 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சதீஷ்குமாா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதா, மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் பிரபாகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சதாசிவம், கூட்டுறவு சங்கச் செயலாளா் தேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.