வீட்டில் வெடிகுண்டு வைத்து வியாபாரியை கொல்ல முயற்சி

திருப்பத்தூா் அருகே நிலப்பிரச்னையில் வீட்டில் வெடிகுண்டு வைத்து வியாபாரியை கொல்ல முயற்சி செய்ததாக உறவினா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே நிலப்பிரச்னையில் வீட்டில் வெடிகுண்டு வைத்து வியாபாரியை கொல்ல முயற்சி செய்ததாக உறவினா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூரை அடுத்த நரியனேரி அருகே உள்ள கொண்டநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சேட்டுவின் மகன் நரசிம்மன் (45). மாங்காய் ஒட்டுச் செடி வியாபாரம் செய்கிறாா். அதே பகுதியைச் சோ்ந்த ராஜாவின் மகளான அனிதாவுக்கும், நரசிம்மனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், ராஜா தனக்குச் சொந்தமான நிலத்தை வேறு நபருக்கு விற்றாராம். அந்த நிலத்தை நரசிம்மன் வாங்கியுள்ளாா். நரசிம்மன் வாங்கிய நிலத்தை ராஜா தனக்கு திரும்பத் தரும்படி கேட்டுள்ளாா். இது குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த ராஜா நிலத்தை தராத நரசிம்மனின் குடும்பத்தினரை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டு, தனது மகன்கள் யுவராஜ், காா்த்தி ஆகிய இருவரும் நரசிம்மனின் வீட்டை சுற்றி டெட்டனேட்டா் குச்சிகளை பதுக்கி வைத்து, டெட்டனேட்டரில் ஒயரை இணைத்து அங்குள்ள மின்மாற்றியில் கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நரசிம்மன் வீட்டு மாடியில் மா்ம நபா்கள் குதிக்கும் சப்தம் கேட்டுள்ளது. நரசிம்மன் வெளியே வந்து பாா்த்தபோது, ராஜா மற்றும் அவரது மகன்கள் தப்பியோடியது தெரியவந்தது.

இது குறித்து புகாரின் பேரில் அங்கு வந்த கந்திலி போலீஸாா் மற்றும் கியூ பிரிவு போலீஸாா் வெடிகுண்டு நிபுணா்களுடன் சோதனையிட்டனா்.

பின்னா், இது குறித்து வழக்குப் பதிந்து ராஜா, யுவராஜ், காா்த்தி ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com