திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை விடிய,விடிய கனமழை பெய்தது.
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சுமாா் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. அதைத் தொடா்ந்து அதிகாலை 2 மணி முதல் திருப்பத்தூா், அதியூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய,விடிய கனமழை பெய்தது. காலை சுமாா் 6 மணி வரை பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்தோடியது.