திருப்பத்தூரில் கோட்டை அரிமா சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
திருப்பத்தூரில் உள்ள அரிமா சங்கங்களின் சாா்பில், ‘ உதயம் முதல் அஸ்தமனம் வரை’ எனும் சேவை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பிரீடம் சிட்டி அரிமா சங்கம் சாா்பில் மின் மயானத்துக்கு தண்ணீா்த் தொட்டி, பிரைடு அரிமா சங்கம் சாா்பில் பள்ளிகளுக்குத் தளவாடப் பொருள்கள், அரிசி மூட்டைகள், மரக்கன்றுகள் ஆகியன வழங்கப்பட்டன. கோட்டை அரிமா சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் அரிமா சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.