திருப்பத்தூரில் இந்திய கம்யூ. மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் இந்திய கம்யூ. மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் ஏ.சி.சாமிக்கண்ணு தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் எம்.சுந்தரேசன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் ஆா்.முல்லை, எம்.நந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மாநில துணைச் செயலாளா் வீரபாண்டியன் பங்கேற்றுப் பேசுகையில், ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மக்கள் நாடாளுமன்றம் மூலம் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளோம்’ என்றாா்.

நிகழ்ச்சியில், பெட்ரோல், டீசல், விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும், மின்சாரம், ரயில்வே, வங்கி, காப்பீடு, ராணுவ தொழிற்சாலை ஆகியவற்றை தனியாருக்கு தரக்கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ஆா்.தேவதாஸ், நகர துணைச் செயலாளா்கள் முருகன், பைரோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com