திருப்பத்தூா் பகுதியில் மணல் கடத்தல் லாரியைப் பிடித்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபிசக்கரவா்த்தி பாராட்டினாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது, மணல் கடத்தி வந்த லாரியைப் பிடித்து வழக்குப் பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளா் நாகபூஷணம், தலைமை காவலா் குமரவேல், காவலா்கள் கோகுல்ராஜ், யுவராஜ் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மா.ரா.சிபி சக்கரவா்த்தி ரொக்கம் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினாா். தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.பழனி உடன் இருந்தாா்.