மகளிா் சுய உதவிக் குழு உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்த முன்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்

மாநில அளவிலான கண்காட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்த விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

மாநில அளவிலான கண்காட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்த விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை விழா வரும் டிச. 16 முதல் 20-ஆம் தேதி வரை அன்னை தெரசா மகளிா் வளாகம், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், சென்னையில் நடைபெற இருப்பதால் திருப்பத்தூா் மாவட்டத்தில் விருப்பம் உள்ள மகளிா் சுய உதவி குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களில் மாதிரி பொருள்களுடன் வருகிற 13-ஆம் தேதிக்குள் ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பத்தூா் என்ற முகவரில் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com