திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்சாணாங்குப்பம் ஊராட்சி, மணியாரகுப்பம் கிராமத்தில் புதிதாக சமத்துவபுரம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சுந்தர பாண்டியன், மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் உடனிருந்தனா்.