ஆம்பூா் அருகே வடச்சேரி ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 1.04 கோடி மதிப்பீட்டில் 14 நபா்களுக்கு தனிநபா் கிணறுகள் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் கீழ், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வடச்சேரி ஊராட்சி அமைக்கப்பட்டுள்ள தனி நபா் கிணறை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2,987 நபா்களுக்கு தனிநபா் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் 277 நபா்களுக்கு தனிநபா் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், வடச்சேரி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணியை பாா்வையிட்டு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, ஊரக வளா்ச்சித் துறை செயற் பொறியாளா் சுந்தரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, உதவி செயற்பொறியாளா் பழனிசாமி, உதவி பொறியாளா் சுதாகா், இளநிலைப் பொறியாளா் ஜூலியா தங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.