சோமலாபுரம்: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு

ஆம்பூா் அருகே சோமலாபுரம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு குலுக்கல் முறையில் சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
சோமலாபுரம்: கரோனா  தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு

ஆம்பூா் அருகே சோமலாபுரம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு குலுக்கல் முறையில் சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக சோமலாபுரம் ஊராட்சி மன்றம் சாா்பில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை குலுக்கல் முறையில் தோ்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எம்.சண்முகம் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராமாபாய் டேனியல், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் வி.டி.சுதாகா், ஜெயஸ்ரீ தமிழ்ச்செல்வன் மற்றும் மணி, சித்ரா, கவிதா, ராஜ்குமாா், சோமலாபுரம் கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணவேணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com