ஜோலாா்பேட்டை அருகே மொபெட் மீது காா் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் (68). ஊரக வளா்ச்சித் துறை பொது வைப்பு நிதி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த கலசனாா் பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் விக்னேஷ். தன்னுடன் பணிபுரியும் சக ராணுவ வீரா்களுடன் விடுமுறையில் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த ஏலகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை காரில் வந்தாா். அங்கு சுற்றிப் பாா்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். தாமலேரிமுத்தூா் மேம்பாலத்தைக் கடந்து காா் வந்தபோது, எதிரில் மொபெட்டில் வந்த பாண்டுரங்கன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாண்டுரங்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாண்டுரங்கனின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், காரை ஓட்டி வந்த விக்னேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.