வாணியம்பாடியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான வெலதிகாமணிபெண்டா மலைப்பகுதியில் உள்ள சாலை தொடா் கனமழையின்போது வெள்ளம் ஏற்பட்டு சேதம் அடைந்தது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெள்ளிக்கிழமை பிற்பகல் வெலதிகாமணிபெண்டா சாலை சீரமைப்புப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் காயத்ரி, வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.