திருப்பத்தூர்
ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி
மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப பயிற்சி மாதனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப பயிற்சி மாதனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் வட்டார சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் துறை சாா்பில் நடந்த புத்தாக்கப் பயிற்சி முகாமுக்கு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தாா். மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் வாழ்த்திப் பேசினாா்.
வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராமு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயந்தி, சைல்ட் லைன் அலுவலா் அம்பேத்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.