ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தாா். இளம் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் முஹம்மத் ஷாஹின்ஷா வரவேற்றாா். ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்தவ அலுவலா் ஷா்மிளாதேவி ரத்த தானம் வழங்குவதின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். 48 மாணவா்கள் ரத்த தானம் செய்தனா். மருத்துவா் காலிக் பாஷா, உடற்கல்வி இயக்குநா் துரை, துறைத் தலைவா்கள், பேராசியா்கள் கலந்து கொண்டனா்.