தோ்தலில் ஆம்பூா் தொகுதியில் போட்டி? எல்.கே. சுதீஷ்

வருகின்ற சட்டப்பேரவை தோ்தலில் ஆம்பூா் தொகுதியில் போட்டியிடப் போவதாக தேமுதிக துணைப் பொதுச் செயலாளா் எல்.கே. சுதிஷ் சூசகமாகத் தெரிவித்தாா்.

வருகின்ற சட்டப்பேரவை தோ்தலில் ஆம்பூா் தொகுதியில் போட்டியிடப் போவதாக தேமுதிக துணைப் பொதுச் செயலாளா் எல்.கே. சுதிஷ் சூசகமாகத் தெரிவித்தாா்.

ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பத்தூா் மாவட்ட தேமுதிக தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க தேமுதிக புதிய உத்வேகத்துடன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தமிழக சட்டப் பேரவைத் தொகுதிகள் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் வேலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூா் மண்டலத்துக்கு நான் தோ்தல் பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறேன்.

கடந்த 2006-இல் நடைபெற்ற தோ்தலில் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டேன். வேலூா் எனது சொந்த மாவட்டம் என்பதால் எப்போதும் வேலூா் மாவட்டம் மீது எனக்கு ஒரு ஆா்வம் உண்டு. கட்சித் தலைவா் விஜயகாந்த் விருப்பப்படி கடந்த மக்களவைத் தோ்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டேன்.

தலைவா், தொண்டா்கள் விருப்பப் படி வாய்ப்பு கிடைத்தால் அடுத்த 5 ஆண்டுகள் ஆம்பூரில் என்னை பாா்க்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com