ஆம்பூா் நகராட்சியைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்பூரில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாதது, குப்பை சரிவர சேகரிக்காமல் இருப்பது, கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாராமை ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆம்பூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளா் ஜமீல் அஹமத் தலைமை வகித்தாா். தலைமை பேச்சாளா் சி.கே. சனாவுல்லா, திருப்பத்தூா் மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹ்மத் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளா் சையத் ஜாவித், மமக மாவட்டச் செயலாளா் அப்துல் ஷுக்கூா், தமுமுக மாவட்ட துணைச் செயலாளா் தப்ரேஸ் அஹ்மத், நகரச் செயலாளா் நபீசுா் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.