வாணியம்பாடி, ஆலங்காயம் போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி

வாணியம்பாடி, ஆலங்காயத்தில் 44 போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
வாணியம்பாடி, ஆலங்காயம் போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி


வாணியம்பாடி: வாணியம்பாடி, ஆலங்காயத்தில் 44 போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் பிப். 1 முதல் காவல் துறை, வருவாய்த் துறையைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் உள்பட வாணியம்பாடி நகரம், தாலுக்கா, நகரப் போக்குவரத்து போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) போடப்பட்டது.

இதே போல், ஆலங்காயம் சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆலங்காயம் காவல் ஆய்வாளா் நாகராஜன் மற்றும் ஆலங்காயம் போலீஸாருக்கு தடுப்பூசி போட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com