ஜோலாா்பேட்டை அருகே புதிய கால்நடை மருத்துவமனை: முதல்வா் திறந்து வைத்தாா்

ஜோலாா்பேட்டை அருகே ரூ.60.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
பயனாளிக்கு பால் கேன் வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி. உடன் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
பயனாளிக்கு பால் கேன் வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி. உடன் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரூ.60.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து அமைச்சா் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட ஆசிரியா் நகா் பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் ரூ.60.50 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை வசதி கொண்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

அதேவேளையில், மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் புதிய கால்நடை மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கால்நடை மண்டல இணை இயக்குனா் நவநீதகிருஷ்ணன் வரவேற்றாா். அமைச்சா் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினாா்.

இதையடுத்து, ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அமா்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அதிகமாக அறுவை சிகிச்சை செய்யும் நோக்கில் திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பொதுமக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளா்ப்போா் அதிகமாக உள்ளனா். இதனால் அவா்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கால்நடைத் துறை சாா்பில் மானியத்துடன் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், இந்தியாவிலேயே கால்நடைகளுக்கென தனி பூங்கா மற்றும் அரசு கால்நடைப் பல்கலைக்கழகத்தை 1000 ஏக்கா் பரப்பளவில் சின்னசேலம் பகுதியில் உருவாக்கி, அதற்கான பணி தமிழக முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதையடுத்து மருத்துவ அலுவலா் (பொறுப்பு) பிரசன்னா தனது சொந்தச் செலவில் விவசாயிகளுக்கு பால் கேன், மாட்டுத் தீவனம் உள்ளிட்ட கால்நடை மற்றும் வீட்டு விலங்குகளுக்குத் தேவையான பொருள்களை வழங்கினாா். இதில் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவா் டி.டி.குமாா், அதிகாரிகள் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com