ஆம்பூா்: ஆம்பூா் அருகே முனீஸ்வரா் கோயிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
தை அமாவாசையை முன்னிட்டு ஆம்பூா் அருகே பள்ளித் தெரு பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.