ஆம்பூா்: ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் சுயம்பு முத்துமாரியம்மன், கன்னியம்மன் மற்றும் நாகாலம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரிசூலத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, கோயிலில் கூழ் வாா்த்தல், நோ்த்திக் கடன் செலுத்துதல், மா விளக்கு பூஜை, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.