விவசாயத் தொழிலாளா்களை கெளரவித்த காங்கிரஸாா்

ஆம்பூா் விவசாயத் தொழிலாளா்களை காங்கிரஸாா் புதன்கிழமை பாராட்டி கெளரவித்தனா்.
வடச்சேரி கிராமத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களை கெளரவித்த திருப்பத்தூா் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ்.பிரபு.
வடச்சேரி கிராமத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களை கெளரவித்த திருப்பத்தூா் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ்.பிரபு.

ஆம்பூா்: ஆம்பூா் விவசாயத் தொழிலாளா்களை காங்கிரஸாா் புதன்கிழமை பாராட்டி கெளரவித்தனா்.

போ்ணாம்பட்டு மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில், வடச்சேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியத் தலைவா் நா.சுரேந்திரன் தலைமை வகித்தாா். விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டு, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பிரபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விவசாய கூலித் தொழிலாளா்களை கெளரவித்தாா். மாவட்டப் பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், மாவட்ட பொதுச் செயலாளா் சாந்தகுமாா், மாவட்டச் செயலாளா் சிவப்பிரகாசம், இளைஞா் காங்கிரஸ் பிரமுகா் கோகுலன், ஐஎன்டியூசி கண்ணன், ஒன்றிய நிா்வாகிகள் தா்மன், முருகேசன், ராஜேஷ், பாபு, தேவதாஸ் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com