திருப்பத்தூா் அருகே பூசாரி வெட்டிக் கொலை

திருப்பத்தூா் அருகே பூசாரி ஒருவா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருப்பத்தூா் அருகே பூசாரி வெட்டிக் கொலை

திருப்பத்தூா் அருகே பூசாரி ஒருவா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட வடுகமுத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமசாமியின் மகன் சீனிவாசன் (29). இவருக்கு மனைவி லட்சுமியும் ஒரு குழந்தையும் உள்ளனா்.

சீனிவாசன் வடுகமுத்தம்பட்டி பகுதியில் ஒரு சிறிய குடில் அமைத்து அருள்வாக்கு கூறி வந்துள்ளாா். அவா் வியாழக்கிழமை இரவு கோயில் வளாகத்திலேயே தூங்கினாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் சீனிவாசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், குரிசிலாப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக அவரின் மனைவி லட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com